Friday, October 17, 2008

அறிவுடைய பிள்ளைகளை உருவாக்குவதில் தாயே முதன்மை வகிக்கிறாள்

நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருகிறாள். பொய், தவறு செய்தால் அன்பால் திருத்துகிறாள். மரியாதைச் சொல்லித் தருகிறாள், பெரியவர்களை மதிக்கச் சொல்லித் தருகிறாள். கல்வியை சிறு வயதிலேயே கற்றுத் தருகிறாள். தன்னம்பிக்கையை ஊட்டுகிறாள், தைரியத்தை வெளிப்படுத்துகிறாள்.

இப்புவியில் பிறந்த அனைத்து உயிருள்ள ஜீவராசிகளுக்கும் தாய் என்பவள் கண்டிப்பாக இருப்பாள். அம்மா என்று அழைக்காமல் எந்தவோர் உயிரும், இல்லை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதற்கேற்ப தாயை விட இந்த உலகில் வேறு எந்தத் தெய்வமும் இல்லை. அவளுடைய அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் எவ்வளவு படித்தவராக இருந்தாலும் எவ்வளவு சொத்து வைத்திருப்பவராக இருந்தாலும் சரி, இவையனைத்தும் தாயின் அன்புக்கு ஈடாகுமா? 10 மாதம் நம்மைச் சுமக்கையில் அவள் பட்ட துன்பம் வெறும் வார்த்தையால் சொல்லித் தீர்க்கின்ற துன்பம் இல்லை. பிள்ளையைப் பெற்று எடுத்தவுடன் அவளுடைய கடமை தீரவில்லை. சுமந்தோம் பெற்றோம் என இல்லாமல், ஞானம் நிறைந்த பிள்ளைகளை உருவாக்குவதில் அவளே முதன்மை வகிக்கிறாள்.

ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கும் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவதற்கும் மற்றும் அறிவாளியாகத் திகழ்வதற்கும் முதல் காரணம் அவர்களை 10 மாதம் ஈன்றெடுத்த தாய்தான். ஒரு தாய் தன் பிள்ளைக்கு முதன் முதலில் கற்றுத் தருவது நல்லொழுக்கமாகும். நல்லொழுக்கம் என்றால் திருடாமல், பொய் சொல்லாமல் இருப்பதுதான். எந்தவொரு தாயும் தன் பிள்ளைக்கு திருட்டும் பொய்யும், மற்றவர்களை ஏமாற்றுவதும் சொல்லித் தரமாட்டாள். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொ௞க்கு ஏற்ப, சிறு வயதிலேயே பொய்யும் திருட்டும் இருந்தால், அது பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தொடரும். அவர்கள் மடியும் வரை தொடரும். இதுதான் ஒரு தாய் தன் பிள்ளைக்கு ஆற்றும் நன்மையா? கண்டிப்பாக இல்லை. நல்லொழுக்கத்தைப் பேணிக்காத்த மாணவர்களே பிற்காலத்தில் அறிவாளியாகத் திகழ்வார்கள்.

அதன் பிறகு, ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறுவயதிலிருந்தே மரியாதையைச் சொல்லித் தருவாள். மற்றவர்களை மதிக்கவும் மரியாதையாக பெரியவர்களிடம் பேசவும் கற்றுத் தருவார். ஓஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?ஔ என்ற பழமொ௞க்கேற்ப சிறுவயதிலேயே தாய் பிள்ளைகளுக்கு மரியாதையைப் பற்றிக் கற்றுத் தரவில்லை என்றால், அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும் மற்றவர்களிடம் மரியாதையாகப் பேச மாட்டார்கள். மரியாதை, பணிவு மற்றும் பக்தியும் உள்ள பிள்ளைகள்தான் பிற்காலத்தில் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள்.

ஒரு பிள்ளை தவறு செய்தால், அதை அன்பால் கண்டிப்பாள் தாய். அன்பால் அந்தப் பிஞ்சு மனதில் உள்ள கெட்டதை வெளியாக்குவாள் தாய். ஒவ்வொரு பிள்ளையும் வளர்ந்து படிக்கும் காலத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக உள்ளவர் தாய். ஒரு தாய் பிள்ளைக்கு சோற்றை மட்டும் பிசைந்து ஊட்டவில்லை. தன்னம்பிக்கையையும் சேர்த்துதான் ஊட்டுகிறாள். ஒவ்வோர் ஆணுக்கும் வெற்றியின் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். அதேபோல், ஒவ்வொரு பிள்ளையின் வெற்றிக்குப் பின்னால் அவனுடைய தாய்தான் இருப்பாள்.

முயற்சியை மூச்சுப்போல் சுவாசிக்கச் சொல்வாள். எப்பொழுதும் சாதனை யையும் வெற்றியையும் அடைய வேண்டும் என்பாள். தோல்வி கண்டால், தோல்விதான் வெற்றிக்கு முதற்படி என்று சொல்லி ஆறுதலாகவும் தன்னம்பிக்கை யாகவும் இருப்பவள் தாய். ஆகவே, தாயின் ஆக்கமும் ஊக்கமும்தான் ஒவ்வொரு பிள்ளையும் அறிவாளியாகச் சிறந்து விளங்க முடிகின்றது.

அதுமட்டுமின்றி, ஒரு தாய் தன் பிள்ளைக்கு மார்பில் பாலை ஊட்டும்போது அவள் தன்னம்பிக்கையையும் சேர்த்து ஊட்டுகிறாள். தைரியத்தையும் சேர்த்து ஊட்டுகிறாள். நல்லதையே பார்க்கச் சொல்வாள், நல்லதையே கேட்கச் சொல்வாள் மற்றும் நல்லதையே பேசச் சொல்வாள். அவள்தான் தாய். தாயின் சொற்படி கேட்டு, அவளின் சொல்லே தெய்வவாக்கு என்று எண்ணி எந்தப் பிள்ளையும் செயல்பட்டால் அவன் கண்டிப்பாக அறிவுடைய பிள்ளையாகத்தான் திகழ்வான். எந்தப் பிள்ளையும் மண்ணில் பிறக்கையில் நல்ல பிள்ளைதான். அவன் நல்லவனாக ஆவதும் தீயவனாக ஆவதும் தாயின் வளர்ப்பில்தான் இருக்கின்றது.

ஆகவே, அறிவுடைய பிள்ளைகளை உருவாக்குவதில் தாயே முதன்மை வகிக்கின்றாள். எந்தப் பிள்ளையும் தாய்ச்சொல் மிக்க மந்திரமில்லை என்று கருதினால் வாழ்க்கையில் வெற்றியைக் காண முடியும். அதே சமயத்தில் எந்தவொரு பிள்ளையும் தாயை உதாசீனப் படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தைத்தான் காண முடியும். தாயாக இருந்து அவள் ஆற்றும் சாதனைதான் எத்தனை? ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் ஒவ்வொரு தாய்க்கும் பிள்ளைகள் பட்ட கடன் தீரவே தீராது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோர் எனக் கேட்ட தாய் என்ற திருக்குறளுக்கு ஏற்ப ஒவ்வொரு மகனும் தாயை பெருமையடையச் செய்ய வேண்டும்.

-தமிழரசி -

தளுவள்: மலேசிய நண்பன்

Thursday, September 25, 2008

இளைஞர்களிடம் சீர்கேடு, சமூகத்துக்குப் பெருங்கேடு !

"இளமைப் பருவம் என்பது சவர்க்காரம் தடவப்பட்ட கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் பிடித்துக் கொண்டு வழுக்கலான பாறையில் நடப்பதற்கு ஒப்பாகும்" என்று அறிஞர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். இதில் இளமைப் பருவம் என்பதைப் பாத்திரமாக நினைத்துக் கொள்ள வேண்டும்; சவர்க்காரம், வழுக்கலான பாறை ஆகியவற்றைச் சுற்றுச் சூழல்கள் எனக் கருத வேண்டும். கண்ணாடிப் பாத்திரத்தை ஏந்திச் செல்பவர்கள் பதின்ம வயது இளைஞர்கள். தப்பித் தவறிச் சந்தர்ப்பச் சூழ்நிலை என்கிற வழுக்கல் பாறையில் வழுக்கி விழுந்து விட்டால், சவர்க்காரம் தடவிய பாத்திரத்தைச் சரியாகவும் அழுத்தமாகவும் கட்டொழுங்குடனும் பிடித்திருக்கத் தவறிவிட்டால் அவர்களின் இளமைப்பருவம் என்கிற கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடும். பிறகு, கண்ணாடிப் பாத்திரத்தை ஒட்ட வைக்க முடியாது என்பது போல, இளமைப் பருவத்தில் மனத்தில் படிந்த அழுக்குகளை நீக்குவது சாத்தியமாகாது.

இந்திய இளைஞர்கள் சமூகச் சீர்கேடுகளிலும் தீய வழிகளிலும் ஈடுபடுவதாகவும், இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அபாயகரமான வழிகளில் செல்வதாகவும் இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

பள்ளியில் வெளிப் புறத்தில் உந்துருளி (மோட்டார் சைக்கிள்) களை வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுடன் பள்ளி முடிந்ததும் மாணவிகள் அவர்களின் உந்துருளிகளில் ஏறிச் செல்கிர்றார்கள் என்று நாமே எத்தனை முறை நேரடியாகப் பாரித்துள்ளோம் . இதைக் கேட்டாலே ஈரக்குலை நடுங்குகிறது, நெஞ்சு பதறுகிறது.

எதிர்காலத் தலைவர்கள் இப்படி உருவானால், இந்தியர்களின் முன்னேற்றம் கருவிலேயே கருகிப் போய்விடுமே என்கிற கவலைதான் அதிகரிக்கிறது.

இளைஞர்கள்தாம் ஏதோ இளமை வேகத்தில் அப்படிச் செய்கிறார்கள் என்றால் இந்த மாணவிகளுக்கு என்ன வந்தது? முள் சேலைமீது பட்டாலும், சேலை முள்மீது பட்டாலும் சேதம் முள்ளுக்கு அல்ல, சேலைக்குத்தான். அது போல, தவறான முறையில் ஆண் பெண்ணுடன் சேர்ந்தாலும் பெண் ஆணுடன் சேர்ந்தாலும் அதன் முழுப்பாதிப்பும் பெண்ணுக்குத்தான் என்பது தெரிந்தும் மாணவிகள் இப்படிச் செய்வது ஏன்?

இதுமட்டுமா, கழுத்தை அறுத்துக் கொலை செய்வது உட்பட மிகவும் கொடூரமான குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதும் நாளுக்குநாள் கூடுகிறதே தவிர குறைந்த பாடில்லை.

இந்திய இளைஞர்களிடையே இத்தகைய பண்பாட்டுக்கு முரணான பழக்க வழக்கங்களும், மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட குற்றச் செயல்களும் பெருகுவதற்குரிய காரண காரியங்கள் என்ன என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்னும் குறளின் கருத்துக்கேற்ப அனைத்து இந்திய அமைப்புகள் ஒருங்கிணைந்த செயல்பாட்டை மேற்கொண்டால்தான், இந்திய இளைஞர்களின் சீர்கேட்டைத் தவிர்க்க முடியும்.

நோய் என்னவென்று முதலில் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கான காரணத்தை அடுத்து அறிந்தபின், அதைத் தணிப்பதற்கான வழியை ஆராய்ந்து அந்த வழியையும் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

வள்ளுவர் காட்டியுள்ள இந்த வழி உடல் நோய்க்கு மட்டுமல்ல; மன நோய்க்கும் பொருந்தும். இதனைப் பின்பற்றி இளைஞர்களிடம் இருக்கும் சீர்கேட்டை அழிக்க முயன்றால்தான் வெற்றி கிடைக்கும்.


நன்றி: சில தலுவலோடு மலேசிய நண்பன்.

Thursday, August 21, 2008

I am blind


A blind boy sat on the steps of a building with a hat by his feet. He held up a sign which said: 'I am blind, please help.' There were only a few coins in the hat.


A man was walking by. He took a few coins from his pocket and dropped them into the hat. He then took the sign, turned it around, and wrote some words. He put the sign back so that everyone who walked by would see the new words.

Soon the hat began to fill up. A lot more people were giving money to the blind boy. That afternoon the man who had changed the sign came to see how things were. The boy recognized his footsteps and asked, 'Were you the one who changed my sign this morning? What did you write?'

The man said, 'I only wrote the truth. I said what you said but in a different way.'

What he had written was: 'Today is a beautiful day and I cannot see it.'

Do you think the first sign and the second sign were saying the same thing?

Of course both signs told people the boy was blind. But the first sign simply said the boy was blind. The second sign told people they were so lucky that they were not blind. Should we be surprised that the second sign was more effective?

Moral of the Story

Be thankful for what you have. Be creative. Be innovative. Think differently and positively.

Invite others towards good with wisdom. Live life with no excuse and love with no regrets. When life gives you a 100 reasons to cry, show life that you have 1000 reasons to smile. Face your past without regret. Handle your present with confidence. Prepare for the future without fear. Keep the faith and drop the fear.

Great men say, 'Life has to be an incessant process of repair and reconstruction, of discarding evil and developing goodness.... In the journey of life, if you want to travel without fear, you must have the ticket of a good conscience.'